/
ஆம்பூா் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டநா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட செவிலியா்கள், பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றன்ர.
கடந்த சில மாதங்களாக செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லையெனவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையெனக்கூறி உடனடியாக தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமெனக் கோரி ஆம்பூா் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.









