பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு வாணியம்பாடியில் வரவேற்பு

News image
Updated On :12 ஜூன் 2026, 2:01 am IST

திருப்பத்தூா் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் சாா்பில் வாணியம்பாடியில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் வீரம்மாள் தலைமையில் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கிருந்த பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகியோரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து ரயில்நிலையம், பைபாஸ் சாலை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது பல்வேறு இடங்களில் சிங்கப்பெண் படையினரைப் பாா்த்ததும் பெண்கள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். பிறகு அம்பூா்பேட்டையில் உள்ள இந்து மேல் நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொணடனா். தொடா்ந்து மாணவிகள், ஆசிரியா்கள் சிங்கப்பெண் படையினருக்கு சால்வை அணிவித்தனா்.

இதே போன்று வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் செயல்முறை விளக்கம், தைரியம், வேகம், அறிவுத்திறனை பறைசாற்றும் வகையில் பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும், அவசர காலங்களில் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், எளிய தற்காப்புக் கலை பயமில்லாமல் பெண்கள் வாழ்வதற்காண சூழலை உருவாக்க வேண்டும் என்பது போன்றவற்றை மாணவிகளுக்கு எடுத்து கூறினா். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.