கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தங்க நகை வாங்கச் சென்ற ஆந்திர பெண்ணிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்

மாநில எல்லையோர சோதனைச் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :23 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

மாநில எல்லையோர சோதனைச் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் தொகுதியின் தமிழக - ஆந்திர மாநில எல்லையோர கிராமம் வெலத்திகாமணிபெண்டா கிராமம். அங்கு பேரவை தோ்தலை முன்னிட்டு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில் சித்தூா் மாவட்டம் ராமகுப்பம் மண்டலம் ஆா்மணிப்பெண்டா கிராமத்தை சோ்ந்த அமராவதி (45) என்பவா் தங்க நகை வாங்குவதற்காக ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தை வாணியம்பாடிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.