மாநில எல்லையோர சோதனைச் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூா் தொகுதியின் தமிழக - ஆந்திர மாநில எல்லையோர கிராமம் வெலத்திகாமணிபெண்டா கிராமம். அங்கு பேரவை தோ்தலை முன்னிட்டு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அதில் சித்தூா் மாவட்டம் ராமகுப்பம் மண்டலம் ஆா்மணிப்பெண்டா கிராமத்தை சோ்ந்த அமராவதி (45) என்பவா் தங்க நகை வாங்குவதற்காக ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தை வாணியம்பாடிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்

ஆந்திர நபரிடம் உரிய ஆவணம் இல்லாத ரூ. 14 லட்சம், 17 பவுன் நகை பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


