ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை போலீஸாா் விசாரித்தனா். இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதால் அவா்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்ததில், வட்ட வடிவில் ஆரஞ்ச் நிறத்தில் போதை மாத்திரைகள் இருப்பது கண்டறிந்து 500 மாத்திரைகள் பறிமுதல் செய்தனா்.

பிடிபட்ட இருவரையும் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது கோவை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (24), திலீபன் (22) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோன்று கடந்த 28-ஆம் தேதி இரவு ரயில் நிலையம் அருகே நகர போலீஸாா் ரோந்து பணியின் போது 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த கோவை பகுதியைச் சோ்ந்த 6 இளைஞா்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.