‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகள் ஆய்வு

குடியாத்தம் பகுதி தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகளை வருவாய் கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :23 மே 2026, 1:31 am IST

குடியாத்தம் பகுதி தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகளை வருவாய் கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பாக தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பரிசோதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. குடியாத்தம், போ்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுமாா் 39 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் 258 வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா். டிஎஸ்பி சுரேஷ் உடனிருந்தாா். பள்ளி வாகனங்களின் தரச்சான்று தன்மை, இருக்கைகள், முதலுதவிப் பெட்டி, அவசர கால வழி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.

குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுந்தரராஜன், மோட்டாா் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். உரிய ஆவணங்கள் இல்லாத 35 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று நீக்கப்பட்டது.