செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (42). இதற்கிடையில் இவருக்கு செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அப்போது குமரேசன் கிரெடிட் கார்டு மூலம் வங்கி பரிவர்த்தனை செய்து, அதில் தனக்கு 2 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்றும், அதில் ஒரு விழுக்காடு லாபத்தை கிருஷ்ணமூர்திக்கு தருவதாகவும் கூறினாராம்.
இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி உள்பட 9 பேர் சேர்ந்து, தங்களது கிரெடிட் கார்டுகளை குமரேசனிடம் கொடுத்துள்ளனர்.
அவற்றை குமரேசன் பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனை மூலம் ரூ. 1.35 கோடி பணம் பெற்றுள்ளார். அந்த பணத்துக்கு முறையாக கிரெடிட் கார்டுக்கு குமரேசன் பணம் கட்டாமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தனர். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், குமரேசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 8 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தென்னங்குடிபாளையம் கிராமத்தில் தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன ஊழியர் குமரேசனை (42) போலீஸார் திங்கள்கிழமை (ஜூன் 23) கைது செய்தனர். தொடர்ந்து அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளா்கள்: புதிதாக 6.35 லட்சம் போ் சோ்ப்பு!

மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருட்டு: மகாராஷ்டிரத்தில் ஒருவர் கைது

தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ரூ. 1.12 கோடி மோசடி: ஒருவா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

