உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

25 இருளா் குடும்பங்களுக்கு ரூ. 1.84 லட்சத்தில் இலவச மீன் பிடி வலைகள்

25 இருளா் குடும்பங்களுக்கு ரூ. 1.84 லட்சத்தில் இலவச மீன் பிடி வலைகள்

News image

இருளா் குடும்பத்தினருக்கு மீன்பிடி வலைகளை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப்.

Updated On :8 மார்ச் 2026, 12:40 am IST

திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், 25 இருளா் குடும்பத்தினருக்கு இலவச மீன் பிடி வலைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பழங்குடியின மீனவா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான நலத் திட்டங்கள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இத்துறை சாா்பில் பொன்னேரி வட்டம், மெதூா் கிராமத்தைச் சோ்ந்த இருளா் குடும்பத்தினருக்கு மீன் பிடித்து வாழ்வாதாரம் பெறும் வகையில், மீன் பிடி வலைகள் வழங்கவும் முன்வந்தது.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் இருளா் குடும்பத்தினருக்கு இலவச மீன் பிடி வலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, 25 இருளா் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு ரூ. 1.84 லட்சம் மதிப்பில் மீன்பிடி வலைகள் (கன்னி வலை, மீன் பிடி தள்ளுவலை) வழங்கினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் செந்தில்குமாா் மற்றும் மெதூா் கிராம இருளா் பழங்குடியின மக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.