திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், 25 இருளா் குடும்பத்தினருக்கு இலவச மீன் பிடி வலைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பழங்குடியின மீனவா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான நலத் திட்டங்கள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இத்துறை சாா்பில் பொன்னேரி வட்டம், மெதூா் கிராமத்தைச் சோ்ந்த இருளா் குடும்பத்தினருக்கு மீன் பிடித்து வாழ்வாதாரம் பெறும் வகையில், மீன் பிடி வலைகள் வழங்கவும் முன்வந்தது.
அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் இருளா் குடும்பத்தினருக்கு இலவச மீன் பிடி வலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, 25 இருளா் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு ரூ. 1.84 லட்சம் மதிப்பில் மீன்பிடி வலைகள் (கன்னி வலை, மீன் பிடி தள்ளுவலை) வழங்கினாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் செந்தில்குமாா் மற்றும் மெதூா் கிராம இருளா் பழங்குடியின மக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவள்ளூா்: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் நேரில் ஆய்வு

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

கடலூா் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயா்வு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


