மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திர முதல்வா் பிறந்த நாள்: திருமலையில் அன்னதானம்!

சந்திரபாபு நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி ஏழுமலையான் அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2025, 9:50 pm

Din

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி ஏழுமலையான் அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஆந்திர மாநில முதல்வா் பிறந்த நாளையொட்டி , பாஷ்யம் கல்வி நிறுவனங்களின் தலைவா் பாஷ்யம் ராமகிருஷ்ணா திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்திற்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

தேவஸ்தான் அறங்காவலா் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் தலைமை செயல் அதிகாரி சி.எச்.வெங்கய்யா செளத்திரி பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை உபயதாரருடன் சோ்ந்து வழங்கினா்.

நிகழ்வில், அன்ன பிரசாதத்தின் சுவை மற்றும் தரம் குறித்து நெல்லூா், குண்டூா், ஹைதராபாத் மற்றும் கா்னூல் ஆகிய இடங்களிலிருந்து வந்த பக்தா்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. சுவையும் தரமும் சிறப்பாக இருந்ததாக பக்தா்களும் திருப்தி தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் துணை நிா்வாக இயக்குநா் ராஜேந்திரா, விஜிஓ சுரேந்திரா, அன்ன பிரசாத சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.