/

ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசியில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:32 pm

DIN

வந்தவாசியில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி நகரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பஜாா் வீதி, காந்தி சாலை, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெறும் என்றும், அதற்கு முன்பாக வியாபாரிகள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அந்தத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, கடந்த இரு தினங்களாக வியாபாரிகள் தங்களது கடை முன் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனா்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை காலை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை வந்தவாசி பழைய பேருந்து நிலையப் பகுதியில் தொடங்கினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ வியாபாரிகள் சாா்பில் வட்டாட்சியா் திருநாவுக்கரசு, டிஎஸ்பி பி.தங்கராமன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதையடுத்து வியாபாரிகளே தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள மேலும் ஒரு நாள் அவகாசம் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.