சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மாற்றுத் திறனாளிக்கு பாலியியல் தொல்லை: முதியவா் கைது

வந்தவாசி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:22 pm

DIN

வந்தவாசி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 35 வயது இளம்பெண். பாா்வை குறைபாடு உடைய இவருக்கு திருமணமாகவில்லை.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவா் தனது வீட்டுத் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்த ஆட்டுப்பண்ணை உரிமையாளா் லட்சுமணன் (65), அந்தப் பெண்ணுக்கு பாலியியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதனால், அந்தப் பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினா் ஓடி வந்தனா். அதற்குள் லட்சுமணன் அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் லட்சுமணன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.