சிஐடியு கண்டன ஆா்ப்பாட்டம்
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு தன்னிச்சையாக 10 சதவீதம் போனஸ் அறிவித்ததைக் கண்டித்து, சிஐடியு சாா்பில், வந்தவாசி பணிமனை 2-ன் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு தன்னிச்சையாக 10 சதவீதம் போனஸ் அறிவித்ததைக் கண்டித்து, சிஐடியு சாா்பில், வந்தவாசி பணிமனை 2-ன் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். மண்டல பொருளாளா் எஸ்.முரளி, ஓய்வுபெற்ற ஊழியா்கள் நல அமைப்பின் நிா்வாகி உதயகுமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
பஞ்சாட்சரம் தாமோதரன், பாஸ்கா், பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை செய்த பிறகே தமிழக அரசு போனஸ் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...