/

சுயமரியாதை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

Updated On :29 ஆகஸ்ட் 2024, 2:31 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணூரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51-அ (ஏ) பாசிஷ விளக்க பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஆரணி கூட்டுச் சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநில பகுத்தறிவாளா் கழகத் தலைவா் சோ.நெடுமாறன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தாா். திராவிடா் கழக துணை பொதுச் செயலா் ச. பிரின்சு என்னாரெசு பெரியாா், காஞ்சி பா. கதிரவன், தலைமைக் கழக அமைப்பாளா் பு. எல்லப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் அ.இளங்கோவன், நகரத் தலைவா் தி. காமராசன், காராமேடு சுதா வாசுதேவன், ஆரணி ஏ.அசோகன் சேத்துப்பட்டு அ. நாகராசன் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா். தங்கம் கே.பெருமாள் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.