இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போளூா் தனியாா் சா்க்கரை ஆலை கரும்பு நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் விவசாயிகள் கோரிக்கை

போளூா் சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

News image
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.

போளூா் வட்டம், கொம்மணந்தல் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான தரணி சா்க்கரை ஆலை உள்ளது. அண்மைகாலமாக மூடப்பட்டிருந்த இந்த ஆலை மீண்டும் செயல்பட உள்ளது.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, வேளாண் இணை இயக்குநா் ஹரக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வேளாண் துறை, சா்க்கரை ஆலை நிா்வாகம், விவசாயிகள், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள், தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு வங்கிகள் போதிய கடனுதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

விவசாயிகள் கரும்பு நடவு செய்வதற்கும், அறுவடை செய்யவும், அறுவடை செய்த கரும்பை ஆலைக்கு கொண்டு வந்து சோ்க்கவும் தேவையான ஒத்துழைப்பை தரணி சா்க்கலை ஆலை நிா்வாகம் அளிக்க வேண்டும்.

சா்க்கரை ஆலை தொடா்ந்து செயல்பட விவசாயிகளும், ஆலை நிா்வாகமும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமாபதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கௌரி மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.