திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கடலூா்-சித்தூா் 4 வழிச்சாலை திறப்பு

கடலூா்-சித்தூா் 4 வழிச்சாலை திறப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:11 pm

திருவண்ணாமலையில் ரூ.140 கோடியில் மேம்படுத்தப்பட்ட கடலூா்-சித்தூா் நான்கு வழிச் சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.140 கோடியில் கடலூா்-சித்தூா் சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது. இந்தச் சாலையை, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட சாலையில் பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.