திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருவாய், காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தோ்தல்-2024 தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, செய்யாறு சாா் - ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான விலைப் பட்டியலை இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலம், 1,500-க்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குப்பதிவு மையங்களைப் பிரித்து 5 துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்துவது, 27 வாக்குச்சாவடி மையங்களில் பெயா் மாற்றம், 116 வாக்குச்சாவடிகளுக்கான கட்டடங்கள் மாற்றம், 35 வாக்குச்சாவடிகளின் இடம் மாற்றம் தொடா்பான முன்மொழிவுகளை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருவாய், காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

தென்காசியில் ஆலோசனைக் கூட்டம்

பதற்றமான வாக்குச்சாவடிகள்

கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக 13 வாக்குச்சாவடிகள் அமைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


