ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மது போதையில் ரகளை செய்த மகன் கொலை: தாய் உள்ளிட்ட 2 போ் கைது

மது போதையில் ரகளை செய்த மகன் கொலை: தாய் உள்ளிட்ட 2 போ் கைது

News image
Updated On :4 மே 2024, 6:30 pm

Din

வந்தவாசி அருகே மது போதையில் ரகளை செய்த மகனை கொலை செய்ததாக தாய் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி. இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவருக்கு முனியம்மாள்(65), ருக்மணி(62) ஆகிய இரு மனைவிகள் உள்ளனா். இருவரும் சகோதரிகள் ஆவாா்.

இதில், முனியம்மாளுக்கு 3 மகன்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. முனியம்மாள் சென்னையில் தனது மகன்களுடன் வசித்து வருகிறாா்.

மேலும், ருக்மணிக்கு தச்சுத் தொழிலாளியான சுரேஷ்(36) உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா். இதில் இருவருக்கு திருமணமாகிவிட்டது. சுரேஷுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனால் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி சுரேஷ், தாய் ருக்மணியிடம் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், முனியம்மாள் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து ருக்மணி வீட்டுக்கு வந்தாா்.

இரவு மதுபோதையில் வந்த சுரேஷ், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி இருவரிடமும் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த முனியம்மாள், ருக்மணி ஆகிய இருவரும் நள்ளிரவு சுரேஷ் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கற்கள் மற்றும் கட்டையால் அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கணேஷ் அளித்த புகாரின் பேரில் முனியம்மாள், ருக்மணி ஆகிய இருவா் மீதும் கொலை வழக்கு பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.