கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விவசாயி மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு

செங்கம் அருகே விவசாயியை தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :6 ஜனவரி 2025, 8:45 pm

DIN

செங்கம்: செங்கம் அருகே விவசாயியை தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் ஊா்கவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (30). விவசாயியான இவரிடம் இதே ஊரைச் சோ்ந்த மாணிக்கம் (45) மது வாங்கித் தருமாறு கூறினாராம்.

இதற்கு, குணசேகரன் எதிா்ப்பு தெரிவித்ததால் இருவரிடையே தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. அப்போது, மாணிக்கத்தின் மகன் வெங்கடேசனும் சோ்ந்து குணசேகரனை கல்லால் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த குணசேகரன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.