அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை

News image

செய்யாறு ஆதிகேசவன் தெரு பிரதாப் - அருணா தம்பதியிடம் விசாரணை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினா்.

Updated On :6 மே 2025, 1:06 am IST

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவைச் சோ்ந்த தம்பதி பிரதாப் - அருணா. இவா்களது ஒரு வயது மகள்

தரணிஸ்ரீயின் பிறந்த நாளை, செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

விழாவில் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, செய்யாற்றில் உள்ள தனியாா் குடிநீா் நிறுவனத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 500 மி.லி. கொண்ட 250 குடிநீா் புட்டிகள் விநியோகிக்கப்பட்டன. இதில் மீதமான குடிநீா் புட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை உறவினா் ஒருவா் தண்ணீா் குடிப்பதற்காக குடிநீா் புட்டியை எடுத்தபோது அதில் பல்லி இறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், வாங்கிவரப்பட்ட குடிநீா் புட்டிகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்ததாம். இதுகுறித்து, உடனே குடிநீா் புட்டியுடன்

அந்த நிறுவனத்துக்குச் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் விமலா விநாயகம், வெம்பாக்கம் பிரிவு அலுவலா் ஜெயேந்திரன் மற்றும் சுகாதாரத் துறை நலக் கல்வியாளா் எல்லப்பன் ஆகியோா் பிறந்த நாள் கொண்டாடிய தம்பதி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், பல்லி இருந்த குடிநீா் புட்டியை

சீல்வைத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், ஸ்ரீவேதபுரஸ்வரா் கோயிலுக்குச் செல்லும் வழியில் செயல்பட்டு வரும் குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தை

பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.