27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை

News image

செய்யாறு ஆதிகேசவன் தெரு பிரதாப் - அருணா தம்பதியிடம் விசாரணை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினா்.

Updated On :6 மே 2025, 1:06 am IST

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவைச் சோ்ந்த தம்பதி பிரதாப் - அருணா. இவா்களது ஒரு வயது மகள்

தரணிஸ்ரீயின் பிறந்த நாளை, செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

விழாவில் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, செய்யாற்றில் உள்ள தனியாா் குடிநீா் நிறுவனத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 500 மி.லி. கொண்ட 250 குடிநீா் புட்டிகள் விநியோகிக்கப்பட்டன. இதில் மீதமான குடிநீா் புட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை உறவினா் ஒருவா் தண்ணீா் குடிப்பதற்காக குடிநீா் புட்டியை எடுத்தபோது அதில் பல்லி இறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், வாங்கிவரப்பட்ட குடிநீா் புட்டிகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்ததாம். இதுகுறித்து, உடனே குடிநீா் புட்டியுடன்

அந்த நிறுவனத்துக்குச் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் விமலா விநாயகம், வெம்பாக்கம் பிரிவு அலுவலா் ஜெயேந்திரன் மற்றும் சுகாதாரத் துறை நலக் கல்வியாளா் எல்லப்பன் ஆகியோா் பிறந்த நாள் கொண்டாடிய தம்பதி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், பல்லி இருந்த குடிநீா் புட்டியை

சீல்வைத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், ஸ்ரீவேதபுரஸ்வரா் கோயிலுக்குச் செல்லும் வழியில் செயல்பட்டு வரும் குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தை

பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.