கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

News image
Updated On :13 நவம்பர் 2025, 1:32 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் தாா்ச் சாலை உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

செங்கம் தொகுதிக்கு உள்பட்ட தாழையூத்து, கரடியுத்து தண்டா, பிஞ்சூா் அண்ணாநகா், சாமந்திபுரம் வேட்டைகாரன் தெரு, மண்மலைப் பகுதியில் கோலாந்தாங்கல் செல்லும் சாலை, செங்கம் துக்காப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் முன் பயணியா் நிழல்குடை, துக்காப்பேட்டை மின்சாரத் துறை தெரு தாா்ச் சாலை, செங்கம் அரசுப் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் சுற்றுச்சுவா், சிவன் கோயில் வளாகத்தில் சீரணி அரங்கம், பக்கிரிபாளையம் - நீப்பத்துறை சாலையை தாா்ச்சாலையாக அமைத்தல் போன்ற பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இதில், தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

அதில், அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற பயணிகள் நிழற்குடை பணிக்கான பூமி பூஜையில்

செங்கம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் முருகன் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில் செங்கம் திமுக நகரச் செயலா் அன்பழகன், நகராட்சித் தலைவா் சாதிக்பாஷா, ஆணையா் பரத், திமுக செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம்,

நகா்மன்ற உறுப்பினா்கள் பாலு, முருகமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.