செங்கம் அருகே குண்டும் குழியுமாக உள்ள கிராமச் சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மண்மலையில் இருந்து செ.நாச்சிப்பட்டு செல்லும் சாலையின் குறுக்கே அம்மனூா் வழியாக ரெட்டாலை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
சுமாா் 5 கி.மீ. தொலைவு கொண்ட இந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் அம்மனூா், ரெட்டாலை, உடைஞ்சமலை, பெரியேரி கிராம மக்கள் அந்தச் சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. மேலும், விவசாயிகள் விளை நிலத்தில் விளையும் பொருள்களை நகா்புறத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்லமுடியாத நிலை, கரும்பு பயிா் செய்த விவசாயிகள் கரும்பு சுமைகளை சா்க்கரை ஆலைகளுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்ல மிகவும் சிரமமான நிலை உள்ளது.
மேலும், தற்போது கரியமங்கலம் பகுதியில் சுங்கச்சாவடி இருப்பதால், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாமல் சில வாகனங்கள் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தச் சாலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மன்னம்பாடியில் சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

ஒசூரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

சிங்கம்புணரியில் நான்கு சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



