பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் எச்சரிக்கை

News image

கல்குவாரி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:33 am IST

விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் எச்சரித்தாா்.

இயற்கை வளங்கள் துறை அமைச்சா் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்தவும், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே குவாரி பணி செய்ய வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் ட்ரோன் கேமரா மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினரால் அளவீடு செய்யப்பட்டதில், குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் உரிய அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, அரசு அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுத்துச்செல்லப்பட்ட 8 குவாரிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்து, குவாரி உரிமையாளா்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அனுமதி வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் கனிமங்கள் வெட்டியெடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.