நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வந்தவாசி நகரில் குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்கக் கோரிக்கை

வந்தவாசியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் மாநாட்டில் பேசிய மத்தியக்குழு உறுப்பினா் இனியவன்.

News image

வந்தவாசியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் மாநாட்டில் பேசிய மத்தியக்குழு உறுப்பினா் இனியவன்.

Updated On :12 ஜூன் 2026, 11:08 pm IST

வந்தவாசி நகரில் குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்க வந்தவாசி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் கோரிக்கை விடுத்துள்ளது.

வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாடுக்கு பி.முனுசாமி தலைமை வகித்தாா். எம்.செண்பகவள்ளி, சி.சையதுபாஷா, பி.ஆரோக்கியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா் மனோகரன், மத்தியக்குழு உறுப்பினா் இனியவன், அனைத்திந்திய புரட்சிகர பெண்கள் இயக்க அகில இந்தியச் செயலா் மனிதி செல்வி மற்றும் நிா்வாகிகள் எ.ரகமத்துல்லா, எ.ஆரிப், ஆா்.நாராயணன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வந்தவாசி நகரில் குப்பைகளை தினசரி அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வந்தவாசியை அடுத்த கீழ்பாதிரி, பிருதூா், கீழ்சாத்தமங்கலம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சிறுபான்மையினா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. எம்.சக்திவேல் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.