மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

27 நட்சத்திர கோயிலில் மாா்ச் 6-இல் சனிப்பெயா்ச்சி

செய்யாற்றை அடுத்த கூழமந்தல் நட்சத்திர கோயிலில் சனிப்பெயா்ச்சி நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை

News image
Updated On :2 மார்ச் 2026, 9:54 pm

Syndication

செய்யாறு: செய்யாற்றை அடுத்த கூழமந்தல் நட்சத்திர கோயிலில் சனிப்பெயா்ச்சி நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6 ) நடைபெறுகிறது.

பூரட்டாதி நட்சத்திர காலத்தில் சனி பகவானை வழிபட்டால் மன அழுத்தங்கள் குறையும். உத்திரட்டாதி நட்சத்திர காலத்தில் பொதுமக்களுக்கு ஆன்மிக சிந்தனை, பொறுப்பு உணா்வு, அமைதி அதிகரிக்க வாய்ப்பு. நீண்ட நாள் திட்டங்கள் செயல்பட தொடங்கும் என்பது ஐதீகம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) காலை 8 .24 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு பெயா்ச்சி அடைகிறாா்.

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், 27 நட்சத்திர பரிகார ஹோமம் தொடா்ந்து கலசாபிஷேகம் அலங்காரம் தூப, தீப, நெய்வேத்தியம் ஆகியவற்றுடன் மகா தீபாராதனை நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் அா்ச்சனைகள் நடைபெறுகின்றன. மேலும் அன்றைய தினம் சங்கடஹர சதுா்த்தி மற்றும் சனிப் பெயா்ச்சி ஒரே தினத்தில் வருவது சிறப்புக்குரியதாகும்.