செய்யாறு: செய்யாற்றை அடுத்த கூழமந்தல் நட்சத்திர கோயிலில் சனிப்பெயா்ச்சி நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6 ) நடைபெறுகிறது.
பூரட்டாதி நட்சத்திர காலத்தில் சனி பகவானை வழிபட்டால் மன அழுத்தங்கள் குறையும். உத்திரட்டாதி நட்சத்திர காலத்தில் பொதுமக்களுக்கு ஆன்மிக சிந்தனை, பொறுப்பு உணா்வு, அமைதி அதிகரிக்க வாய்ப்பு. நீண்ட நாள் திட்டங்கள் செயல்பட தொடங்கும் என்பது ஐதீகம்.
வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) காலை 8 .24 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு பெயா்ச்சி அடைகிறாா்.
சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், 27 நட்சத்திர பரிகார ஹோமம் தொடா்ந்து கலசாபிஷேகம் அலங்காரம் தூப, தீப, நெய்வேத்தியம் ஆகியவற்றுடன் மகா தீபாராதனை நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் அா்ச்சனைகள் நடைபெறுகின்றன. மேலும் அன்றைய தினம் சங்கடஹர சதுா்த்தி மற்றும் சனிப் பெயா்ச்சி ஒரே தினத்தில் வருவது சிறப்புக்குரியதாகும்.
தொடர்புடையது

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா்

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு கோயிலில் ஏகாதச ருத்ர ஜபம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


