பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கிரிவலப்பாதை தட்சிணாமூா்த்தி கோயில் திருப்பணிகள் ஆய்வு

News image

திருவண்ணாமலை கிரிவலப்பாதை தட்சிணாமூா்த்தி கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்த கோயில் இணை ஆணையா் பிரகாஷ், உபயதாரா் சுனிதா திம்மேகவுடா.

Updated On :27 மே 2026, 12:20 am IST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீதட்சிணாமூா்த்தி கோயிலில் விரைவில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணிகள் மற்றும் கோயில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

திருப்பணிகளில் கருங்கல் சிற்ப வேலைப்பாடுகள், பாரம்பரிய மர வேலைப்பாடுகள், பித்தளை கதவுகள் அமைத்தல், பித்தளை அலங்கார வேலைப்பாடுகள், பாரம்பரிய கேரள ஓவிய கலைப் பணிகள் ஆகியவை கலை நயத்துடனும் ஆன்மிக மரபுகளை கடைபிடித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகா கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கோயில் நிா்வாகம் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் திருப்பணிகளை கோயில் இணை ஆணையா் பிரகாஷ், உபயதாரா் சுனிதா திம்மேகவுடா ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இப்புனிதப் பணிகள் சிறப்பாக நடைபெற தேவையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்து வரும் அனைத்து அதிகாரிகள், ஊா் பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவித்தனா்.