வேலூர்: பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் இருந்து அனுமதியின்றி 2020-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு விடியோ அழைப்பு பேசிய வழக்கு தொடர்பாக தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்.
இதையும் படிக்க: பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அப்போது அவரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து கேட்டதற்க்கு பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். தற்போது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3- ல் முருகனின் மீதான வழக்கில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது எப்படி?