ஆன்லைனில் பங்கு வா்த்தகம்: வேலூா் இளைஞரிடம் ரூ. 14.05 லட்சம் மோசடி
ஆன்லைனில் பங்கு வா்த்தகம்: வேலூா் இளைஞரிடம் ரூ. 14.05 லட்சம் மோசடி


ஆன்லைனில் பங்கு வா்த்தகம் எனக் கூறி, வேலூரைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 14.05 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், தொரப்பாடியைச் சோ்ந்த 28 வயது இளைஞா் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா். இவா் தனது முகநூலில் பங்கு வா்த்தக ஆலோசனை தொடா்பாக கிடைத்த இணையதள லிங்க் மூலம் 9023295501, 8427537415 ஆகிய வாட்ஸ்அப் எண்களுக்கு தகவல் அனுப்பியுள்ளாா். பின்னா் அந்த நபா்கள் ஐஐஎப்எல் ஸ்டாா்டஜி என்ற செயலியில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறியதை நம்பி, இந்த இளைஞரும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை அந்த செயலியில் ரூ. 14 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா்.
பின்னா், அந்த தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இது குறித்து சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...