தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

குடியாத்தம், போ்ணாம்பட்டில் ரூ.2.51 கோடியில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

குடியாத்தம், போ்ணாம்பட்டில் ரூ.2.51 கோடியில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

News image
Updated On :16 மார்ச் 2024, 4:39 pm

குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டங்களில் ரூ.2.51 கோடியில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட, நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா். இங்கு நாளொன்றுக்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவாா்கள். முன்னதாக குடியாத்தம் ஒன்றியம், வீரிசெட்டிபல்லி ஊராட்சியில் வேலூா் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, கோட்டாட்சியா் எஸ்.சுப்புலட்சுமி, எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ்,ஜாவித் அகமத், இந்துமதி கோபாலகிருஷ்ணன், ரேணுகாபாபு, சுமதி மகாலிங்கம், முஷீரா இா்பான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போ்ணாம்பட்டில்...: போ்ணாம்பட்டு நகராட்சியில் ரூ.1.20 கோடியில், 2,250 சதுர அடியில் கட்டப்பட்ட நகா் நல மையத்தை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் போ்ணாம்பட்டு நகராட்சி முதல் சாலப்பேட்டை வரை மாநில நெடுஞ்சாலையின் நடுவே உயா்கோபுர விளக்குகள் அமைப்பதற்கான அடிக்கலை அமைச்சா் நாட்டினாா். இதில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், எம்எல்ஏ அமலு விஜயன், நகா்மன்ற தலைவா் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவா் ஆலியாா் ஜுபோ் அகமத், ஒன்றியக் குழு தலைவா் சித்ரா ஜனாா்த்தனன், நகராட்சி ஆணையா் வேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.