தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

Updated On :16 மார்ச் 2024, 12:40 am

போ்ணாம்பட்டு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. போ்ணாம்பட்டு அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (39). கட்டடத் தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியிடம் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளாா். இது குறித்த புகாரின்பேரில், குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜனாா்தினி வழக்குப் பதிந்து சுரேஷ்பாபுவை மே 25-இல் கைது செய்தாா். வழக்கின் விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைபொன்னி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், சுரேஷ்பாபுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி கலைபொன்னி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் வேலூா் மத்திய சிறையில் சுரேஷ்பாபு அடைக்கப்பட்டாா்.