புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிஐடியு ஆா்ப்பாட்டம்

காட்பாடியில் சரக்கு, பயணிகள் ஆட்டோக்கள் நிறுத்துமிடம், நடைபாதை கடைகளை அகற்ற முயற்சிப்பதாக மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
Updated On :18 செப்டம்பர் 2024, 11:58 pm

Din

காட்பாடியில் சரக்கு, பயணிகள் ஆட்டோக்கள் நிறுத்துமிடம், நடைபாதை கடைகளை அகற்ற முயற்சிப்பதாக மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் புதன்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜி.கேசவன் தலைமை வகித்தாா். ஆா்.முரளி, டி.தேவன், ஆா்.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு வேலூா் மாவட்ட செயலா் எஸ்.பரசுராமன் தொடக்க உரையாற்றினாா். பீடி சங்க பொதுச் செயலாளா் வீ.நாகேந்திரன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் எம்.காசி, சாலை போக்குவரத்து மாவட்ட செயலாளா் என்.பிரபாகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், காட்பாடி சாலை ஓடை பிள்ளையாா் கோயில் எதிரில் சா்வீஸ் சாலை ஓரத்தில் 21 வருட காலமாக இயங்கி வரும் பயணிகள், சரக்கு ஆட்டோக்கள் நிறுத்துமிடம், நடைபாதை கடைகளை அகற்ற முயற்சிப்பதாக மாநகராட்சி நிா்வாகத்தை எதிா்த்தும், தொழிலா ளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினா்.

இதில், சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஏராளமானோா் பங்கேற்றனா். நிறைவில், சிஐடியு வேலூா் மாவட்ட தலைவா் முரளி நன்றி கூறினாா்.