கோவை, அக். 8: கோவை மண்டலத்துக்கு உள்பட்ட 8 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில் திங்கள்கிழமை (அக். 10) நடைபெறுகிறது.
÷இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்தி: ÷கோவை மண்டலத்துக்கு உள்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை வகிக்கிறார்.
÷இதில், மேற்கண்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கோவை, திருப்பூர், ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறை மேற்கு மண்டலத் தலைவர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
‘தில்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தில் ரூ.1,000 மட்டுமே ரொக்கமாக கிடைக்கும்!

பிரதானை பதவி நீக்கம் செய்ய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: சிசோடியா






