அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூய்மைப் பணியில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவர்கள்

வால்பாறை தூய இருதய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:44 pm

DIN

வால்பாறை தூய இருதய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
வால்பாறை தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம், தேசியப் பசுமைப் படை,  சாரண,  சாரணியர் இயக்கம்,  இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தொடக்க விழா பள்ளி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்குப் பள்ளி முதல்வர் கவிதா தலைமை வகித்தார். மானாம்பள்ளி வனச் சரகர் சேகர் கலந்து கொண்டு பசுமைத் திட்டங்கள் குறித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து,  வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தபால் நிலையம் வரை சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகளை பள்ளி மாணவர்கள் அகற்றினர். மேலும், சுற்றுப்புறத் தூய்மை குறித்தும் பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.