தூய்மைப் பணியில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவர்கள்

வால்பாறை தூய இருதய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
Updated on
1 min read

வால்பாறை தூய இருதய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
வால்பாறை தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம், தேசியப் பசுமைப் படை,  சாரண,  சாரணியர் இயக்கம்,  இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தொடக்க விழா பள்ளி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்குப் பள்ளி முதல்வர் கவிதா தலைமை வகித்தார். மானாம்பள்ளி வனச் சரகர் சேகர் கலந்து கொண்டு பசுமைத் திட்டங்கள் குறித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து,  வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தபால் நிலையம் வரை சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகளை பள்ளி மாணவர்கள் அகற்றினர். மேலும், சுற்றுப்புறத் தூய்மை குறித்தும் பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com