கோவில்பாளையம் அருகே உள்ள விளாங்குறிச்சியில் 12 வயது சிறுவன் காணாமல் போனது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி ஹசினா பானு (32), இவர்களது மகன் இம்ரான்(12). இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இம்ரானை அவரது பெற்றோர், உறவினர்களின் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. நண்பர்களிடம் விசாரித்ததில் சென்னை செல்வதாகக் கூறிச் சென்றதாக தெரிவித்தனர். இது குறித்து ஹசினா பானு கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரெடாய் அமைப்பு சாா்பில் வீட்டுமனை கண்காட்சி தொடக்கம்

குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீா் தேக்கம்: பல்லடம் நகராட்சி மேலாளரிடம் புகாா்

இந்திய கம்யூ. கட்சியினா் நடைப்பயணம்

கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


