நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

போக்குவரத்துத் துறையில் புதிய செயலி அறிமுகம்: கோவையில் 2 அலுவலகங்களில் சோதனை ஓட்டம்

சூலூர் அருகே மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை சார்பில் புதிய செயலி வாகன் 4 மென்பொருள் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

சூலூர் அருகே மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை சார்பில் புதிய செயலி வாகன் 4 மென்பொருள் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் போக்குவரத்துத் துறை நாடு முழுவதும் ஒரே செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.இது குறித்து சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்திய மூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 142 போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் உள்ளன.இவற்றில் 25 போக்குவரத்துறை அலுவலகங்களிலும், கோவையில் உள்ள 5 அலுவலகங்களில் கோவை தெற்கு மற்றும் சூலூர் போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் இந்த புதிய மென்பொருள் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் தேசிய அளவில் வாகனங்களின் பதிவை எங்கு வேண்டுமானாலும் அறியமுடியும். வாகன உரிமம் மாற்றம் செய்யும்போது புதிய பதிவுச் சான்று வழங்கப்படும். பணிகளை எளிமையாகவும் விரைவாகவும் செய்யமுடிகிறது. இதுவரை கனிணி சர்வர்களை தமிழக அரசு பராமரித்தது. இந்த செயலியை நாடு முழுமைக்கும் மத்திய அரசே பராமரிக்கும். 
போலி பதிவெண்கள் இந்த முறையில் ஒழிக்கப்படும். பதிவெண்கள் ரேண்டம் முறையில் கொடுக்கப்படும். இந்த முறையில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை, ஸ்மார்ட் கார்டு பதிவு சான்று உள்ளிட்ட வசதிகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
புதிய செயலியில் வாகன விற்பனை முகவர்களுக்கு புதிய வாகனங்களின் பதிவை பதிவு செய்யும் வசதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் நாடு முழுமைக்கும் பயன் உள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.