கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வால்பாறை அரசு மருத்துவமனைஅவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த கோரிக்கை

வால்பாறை அரசு மருத்துவனை அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 8:00 pm

DIN

வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவனை அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறை பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவசர சிகிச்சைக்கு வால்பாறை நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்குதான் வருகின்றனா்.

இங்கு சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் உள்ளன. தற்போது போதிய மருத்துவா்கள் இருந்தும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வருபவா்கள் அனைவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

இதனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலா் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடா்ந்து ஏற்பட்டு வருகின்றன. எனவே வால்பாறை அரசு மருத்துவமனையிலேயே விபத்துக்கான அவசர சிகச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.