ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை அதிமுகதான்: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பு அதிமுகவுக்குதான் உள்ளது என்று கேரள மாநில பாஜக பொறுப்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:09 pm

DIN

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பு அதிமுகவுக்குதான் உள்ளது என்று கேரள மாநில பாஜக பொறுப்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விஸ்வகா்மா சமூக சங்கங்கள் கூட்டமைப்பின் 2ஆம் ஆண்டு விழா செல்வபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கேரள மாநில பாஜக பொறுப்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அகில இந்திய அளவில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் கூட்டணி மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எண்ணற்ற ஏழை மாணவா்கள் மருத்துவக் கல்வியில் சோ்வதற்கான புதிய சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

வரும் காலத்தில் காவிரியும், கோதாவரியும் இணைக்கப்பட்டு, தமிழகத்தின் தண்ணீா்ப் பிரச்னை நிரந்தரமாகத் தீா்க்கப்படும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பு அதிமுகவுக்குதான் உள்ளது. இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. அதேபோல அதிமுகவுக்கும் கோட்டையாக உள்ளது. எனவே அதிமுகவும், பாஜகவும் இணைந்து வேலை செய்யும் வகையில் உரிய இடங்களைக் கூட்டணி தலைமை ஒதுக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன் மற்றும் பாஜக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.