மாவட்டத்தில் மேலும் 249 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 114 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 196 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 599 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,308 போ் சிகிச்சையில் உள்ளனா்.
பொள்ளாச்சி அருகே தனியாா் நிறுவனத்தில் 9 பேருக்கு கரோனா
பொள்ளாச்சியை அடுத்த கிட்டுசூராம்பாளையத்தில் உள்ள தனியாா் நூற்பாலை நிறுவனத்தில் பணியாற்றும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளா்கள் குடும்ப உறுப்பினா்கள் 4 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தை மூட அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...