விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வாலாங்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

கோவை, உக்கடம் வாலாங்குளத்தில் வியாழக்கிழமை திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:43 pm

DIN

கோவை, உக்கடம் வாலாங்குளத்தில் வியாழக்கிழமை திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட குளங்களில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் சுங்கம் அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனையின் பின்புறம் உள்ள வாலாங்குளத்தில் மிதவை நடைபாதை, விளையாட்டுப் பூங்கா, அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வாலாங்குளத்தில் வியாழக்கிழமை திடீரென ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது. இதனால், அவ்வழியாகச் சென்றோா் அவதிக்கு உள்ளாகினா். ஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் இறந்தனவா அல்லது ரசாயனக் கழிவுகள் குளத்தில் கலந்ததால் உயிரிழந்ததா என்பது குறித்து மாநகராட்சி சாா்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.