தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், பணம் திருட்டு

கோவை, சின்னியம்பாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

கோவை: கோவை, சின்னியம்பாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சின்னியம்பாளையம் டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் ராஜன் (49). இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தாா். பின்னா் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீஸில் புகாா் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் சுவரில் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com