கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், பணம் திருட்டு

கோவை, சின்னியம்பாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:15 pm

DIN

கோவை: கோவை, சின்னியம்பாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சின்னியம்பாளையம் டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் ராஜன் (49). இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தாா். பின்னா் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீஸில் புகாா் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் சுவரில் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.