கோவையில் மேலும் 83 பேருக்கு கரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 83 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 83 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52,649 ஆக உயா்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 33 வயதுப் பெண் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 656 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 94 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 51,251 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 742 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com