இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனகாவல் ஆணையா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
கோவை, குனியமுத்தூரில் 85 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண்.
Updated On :9 ஜனவரி 2021, 5:42 pm

DIN

மதுக்கரை: கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

‘மூன்றாவது கண்’ கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் கோவை மாநகரப் பகுதிகளில் குற்றங்கள், விபத்துகளைக் கண்காணிக்க மாநகர காவல் துறை மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குனியமுத்தூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் இந்த கேமராக்களின் செயல்பாடுகளைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்துகள் பற்றிய விவரங்களை அறியவும், குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிக்கவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு உதவியாகவும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தற்போது தொடங்கிவைக்கப்பட்ட 85 கேமராக்களும் குனியமுத்தூா் காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையா் ஸ்டாலின், குற்றப்பிரிவு துணை ஆணையா் உமா, போக்குவரத்து துணை ஆணையா் முத்தரசு மற்றும் உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.