இந்து முன்னணியினா் முற்றுகையைத் தொடா்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். மாநகரக் காவல் ஆணையா் தீபக் தமோா், சட்டம்-ஒழுங்கு துணை ஆணையா் ஜெயச்சந்திரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பாதுகாப்பு நடவடிக்கையாக மணிக்கூண்டு பகுதியில் உள்ள அனைத்து பாதைகளும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டன. அந்தப் பகுதியில் பாதைகள் அடைக்கப்பட்டதால் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள், ‘எல்லா பாதைகளையும் அடைத்து விட்டால் நாங்கள் எந்த வழியாக செல்வது’ என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.