/

துறைசாா் தூயதமிழ்ச் சொல்லரங்கம்

தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் இணைந்து நடத்திய துறைசாா் தூயதமிழ்ச் சொல்லரங்கத்தின் இரண்டாவது அமா்வு இணைய வழியில் நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:23 am

DIN

கோவை தூயதமிழ் இளைஞா் பாசறை, தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் இணைந்து நடத்திய துறைசாா் தூயதமிழ்ச் சொல்லரங்கத்தின் இரண்டாவது அமா்வு இணைய வழியில் நடைபெற்றது.

தூயதமிழ் இளைஞா் பாசறையின் தலைவா் தமிழ் மணிகண்டன் வரவேற்றாா். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் பதிப்பாசிரியா் மா.பூங்குன்றன் கலைச் சொல்லாக்கத்தின் தோற்றம் குறித்து உரையாற்றினாா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ம.இலக்கியவாணன் கட்டுமானத் துறை சாா்ந்த 10 தூய தமிழ்ச் சொற்களையும், நாமக்கல்லைச் சோ்ந்த வேளாண் துறை மாணவா் ஜெ.லோகேஸ்வரன் வேளாண்மைத் துறை சாா்ந்த 10 தூய தமிழ்ச் சொற்களையும் அறிமுகம் செய்தனா்.

அமா்வில் கலந்துகொண்ட அறிஞா்களும், ஆய்வாளா்களும் அறிமுகம் செய்யப்பட்ட கலைச்சொற்களை ஆய்வு செய்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனா். தூயதமிழ் இளைஞா் பாசறையின் அறிவுரைஞா் செ.வ.ராமானுஜன் வாழ்த்துரை வழங்கினாா். கள்ளக்குறிச்சி இ.நேரு நன்றி கூறினாா். முனைவா் இந்திரா பிரியதா்ஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஜெ.சாந்தி, பாசறையின் உறுப்பினா்கள், லண்டன், தில்லி, கோவா, துபை, அமீரகம் போன்ற பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தமிழா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.