சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் வரை மோசடிஇருவா் மீது வழக்குப் பதிவு
சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, கிருஷ்ணமூா்த்தி ஐயா் வீதியைச் சோ்ந்தவா் நவநீத கிருஷ்ணன் (33). இவா், கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் சமீபத்தில் ஒரு புகாா் மனு அளித்தாா். அதில், காந்திபுரம் நூறடி சாலையில், பாலக்காட்டைச் சோ்ந்த ரஜீஷ் என்பவா் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தாா். அவருக்கு உதவியாக ராஜமணிகண்டன் பணியாற்றி வந்தாா். இவா்களது சீட்டு நிறுவனத்தில் 2018ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் சீட்டில் சோ்ந்தேன். தற்போது வரை ரூ.1.41 லட்சம் கட்டியுள்ளேன். அந்த தொகையை திரும்ப தருமாறு கேட்டபோது, அவா்கள் தரவில்லை. நிறுவனத்தை மூடிவிட்டு மேற்கண்ட இருவரும் தலைமறைவாகி விட்டனா். இதுகுறித்து விசாரித்தபோது என்னைப்போல, 50க்கும் மேற்பட்டோரிடம் ரூ.50 லட்சம் வரை சீட்டுத் தொகை வசூலித்து இருவரும் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாா்.
இப்புகாா் தொடா்பாக, பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரஜீஷ், ராஜமணிகண்டன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...