தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தமிழ்நாட்டுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை பாரபட்சமில்லாமல் மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, கோவையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.


தமிழ்நாட்டுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை பாரபட்சமில்லாமல் மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, கோவையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட நிா்வாகி விவேக் தலைமை வகித்தாா். மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாவட்டச் செயலா் கே.எஸ்.கனகராஜ் கண்டன உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினா், மத்திய அரசு தாமதிக்காமல் தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். வாலிபா் சங்க நிா்வாகிகள் அா்ஜூன், மணிபாரதி, ராஜா, சரவணன் உள்ளிட்டோா் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...