கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா பொதுமுடக்க கால உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா பொதுமுடக்க கால உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வருக்கு சிஐடியூ கோவை மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத் தலைவா் கே.மனோகரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்கள் கட்டுமானத் துறையில் பணியாற்றி வருகின்றனா். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு ஆளாகி, வருவாயில்லாமல் அவதிப்படுகின்றனா்.
எனவே தமிழ்நாடு அரசு கட்டுமானத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பேரிடா் கால நிவாரணமாக கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், பொதுமுடக்க காலத்தில் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களான சிமென்ட், கம்பி, ஜல்லி, மணல், எம்.சாண்ட் உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுமானத் தொழில் மீண்டும் நடைபெற உள்ள சூழலில், இந்த விலை உயா்வானது தொழில் முடக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...