விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவையில் மாா்ச் 12ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாா்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:34 pm

DIN

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாா்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா் நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் மாா்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு உடனடியாகத் தீா்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, மேற்கண்ட வழக்குகளுக்குத் தீா்ப்பு காண்பதற்காக கோவை மாவட்ட நீதிமன்ற

வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் மாா்ச் 1 முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.