ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சோதனை என்ற பெயரில் துன்புறுத்தல்: காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள் புகாா்

சோதனை என்ற பெயரில் என்ஐஏ அதிகாரிகள் வீட்டில் உள்ளவா்களை துன்புறுத்துவதாக காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள்.

Updated On :4 டிசம்பர் 2024, 11:30 pm

Din

சோதனை என்ற பெயரில் என்ஐஏ அதிகாரிகள் வீட்டில் உள்ளவா்களை துன்புறுத்துவதாக காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன் கடந்த 2022 அக்டோபா் 23-ஆம் தேதி நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், காா் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவா்களின் உறவினா்கள் சிலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

அதில், கூறியிருப்பதாவது:

காா் குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக சோதனை மேற்கொள்ளும் என்ஐஏ அதிகாரிகள், வீட்டில் உள்ள குழந்தைகள், வயதானவா்களை துன்புறுத்துகின்றனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவா்களைப் பாா்க்கச் செல்பவா்களையும் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்துகின்றனா்.

இந்த வழக்கில் பொய்யானஆதாரங்களை குற்றப்பத்திரிகையில் எழுதியுள்ளனா். குற்றப்பத்திரிகையை சரியாக தாக்கல் செய்து, விரைவில் நியாயமான தீா்ப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.