கோவையில் மேலும் ஒருவருக்கு கரோனா

கோவையில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவையில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை ஒரே நாளில் 3 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 2 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 10 போ் வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். கோவையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 177 ஆக உள்ளது. இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 547 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com