கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுபான்மையினா் நல ஆணைய ஆய்வுக் கூட்டம்

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண். உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.

Updated On :13 நவம்பர் 2024, 11:26 pm

Din

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா் செயலா் வி.சம்பத், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, குழு உறுப்பினா்கள் ஸ்வா்ணராஜ், நஜிமுதீன், ராஜேந்திர பிரசாத், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், 27 பயனாளிகளுக்கு கிறிஸ்தவ பணியாளா் நலவாரிய அட்டைகளும், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் சாா்பில் ரூ.2.80 லட்சம் மதிப்பில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 6 பயனாளிகளுக்கு ரூ.36,000 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும், 2 உலமாக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் இருசக்கர வாகன மானியம், டாம்கோ திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.22.15 லட்சம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.25.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் வழங்கினாா்.

கூட்டத்தில், பள்ளிவாசல், தேவாலய கட்டடங்கள் கட்ட தடையின்மை சான்று வேண்டி இக்குழுவிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து, உடனடியாக இரண்டு தேவாலயங்களுக்கும், ஒரு பள்ளிவாசலுக்கும் தடையின்மை சான்றுகள் வழங்கப்பட்டன.