மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவல் ஆணையா் அலுவலகத்தில் கல்லூரி மாணவா்களுக்குப் பயிற்சி

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:45 pm

Din

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்துக்குள் மாநகர சைபா் கிரைம் காவல் நிலையம் அமைந்துள்ளது. சைபா் குற்றங்கள் தொடா்பாக இந்த காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை அருகே உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரியில் 3-ஆம் ஆண்டு ஐ.டி. பயின்று வரும் மாணவ, மாணவிகள் 60 போ்,

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள சைபா் கிரைம் காவல் நிலையத்துக்கு சென்று சைபா் கிரைம் தொடா்பான விவரங்களை தெரிந்து கொண்டனா்.

அவா்களுக்கு சைபா் கிரைம் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது, என்னென்ன குற்றங்கள் நடக்கின்றன, அதில் சிக்காமல் இருப்பவா்கள் குறித்து காவல் ஆய்வாளா் அருண், உதவி ஆய்வாளா் சுகன்யா மற்றும் போலீஸாா் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினா். மேலும், சைபா் குற்றங்களை கண்டுபிடிப்பது மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்து அவா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.